கிருஷ்ணகிரி, செப்.11: பர்கூரில் நடந்த டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணியில், அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பர்கூரில் நடந்த டெங்கு விழிப்புணர்வு பேரணியை, சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் பிரியராஜ் தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சிவக்குமார், முதுநிலை மருத்துவ அலுவலர் டாக்டர் சற்குணம், பர்கூர் பேரூராட்சி செயல் அலுவலர் சாம்கிங்ஸ்டன், ஓய்வு பெற்ற வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் உதயசூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பேரணியில் துணை இயக்குநர் பிரியராஜ் பேசுகையில், ‘மழை காலம் தொடங்க உள்ள நிலையில், பொதுமக்கள் வீடுகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் புழுக்கள் உருவாகாதவாறு, மேல் மூடி அமைக்க வேண்டும். வீட்டு சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.