சென்னை: உத்திரமேரூர் அருகே 1200 ஆண்டுகள் பழமையான கொற்றவை சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த காவனூர் புதுச்சேரி கிராமத்தில் பொன்னியம்மன் கோயில் உள்ளது. இதன் அருகே, கிராம மக்கள் காவல் தெய்வமாக கருதி ஒரு சிலைக்கு தினமும் மஞ்சள் குங்குமம் வைத்து வழிபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தமிழ்நாடு தொல்லியல் துறை ஓய்வு பெற்ற பேராசிரியர் மார்க்சியா காந்தி, தனது குழுவினருடன் இணைந்து மேற்கண்ட சிலையை ஆய்வு செய்தார். அதில், அந்த சிலை சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன் 8ம் நூற்றாண்டில் பல்லவர் ஆட்சி காலத்தின் கொற்றவை சிலை என தெரியவந்தது.