தா.பழூர். செப். 10:அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அண்ணகாரன்பேட்டை கிராமத்தில் இருந்து சோழன்மாதேவி செல்லும் சுமார் 5 கிமீ. தார்சாலை முற்றிலும் பெயர்ந்து காணப் படுகிறது இந்த தார் சாலை போடப்பட்டு சுமார் 8 வருடங்களுக்கு மேல் ஆகிறது. கடந்த 3 வருடங்களாகவே இந்த தார்சாலை இவ்வாறு கிடப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஜெயங்கொண்டத்தில் இருந்து தா.பழூர், அண்ணன்காரன் பேட்டை வழியாக அணைக்கரை செல்லும் பேருந்து வழித்தடம். இந்த சாலை சுமார் மூன்று வருடங்களாக முற்றிலும் பெயர்ந்துள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கும் இந்த சாலை பெரிதும் பயன்படுகிறது.சாலை பெயர்ந்து சரளைகளாக கிடப்பதால் இருசக்கர வாகனங்கள் பயணிப்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.