சூளகிரி, ஆக.22: சூளகிரி சுற்றுவட்டார பகுதியில் சுற்றி திரியும் குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். சூளகிரி அண்ணாநகர், கோட்டை தெரு, காமராஜர் காலனி, கீழ் தெரு, முஸ்லிம் தெரு, கிருஷ்ணகிரி-ஓசூர் சாலை, சூளகிரி-பேரிகை சாலை, விஐபி நகர், கமலா காலனி, வாணியர் தெரு, நெசவாளர் தெரு, கேகே நகர், டேம் ேராடு, டிகே நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் சுமார் 500க்கும் மேற்பட்ட குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து உணவுப்பொருட்களை சாப்பிட்டும், அச்சுறுத்தியும் வருவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.