போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து பணிமனைகளில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகத்திற்கு சொந்தமாக பல்வேறு இடங்களில் பணிமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு நேற்று காலை பணிக்கு வந்த தொழிலாளர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் அவர்கள் பணிக்கு திரும்பினர்.

Related Stories: