நாகை, ஜூலை 18: நாகை மாவட்ட விவசாயிகள் கிசான் கார்டு பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கும் திட்டம் (கிசான் கார்டு) தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக 1998ம் வருடம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடன் அட்டையை கொண்டு விவசாயிகள் விதைகள்,
உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் போன்றவற்றை வாங்கிட பயிர்க் கடன் குறைந்த வட்டியில் பெற்றிடலாம். தற்சமயம் கடன் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்பு போன்றவற்றிற்கும் வழங்கப்படுகிறது.