தாம்பரம், ஜூலை 16: ஊழி யர்கள், உரிமையாளரை தாக்கி பெட்ரோல் பங்க் சூறையாடிய 9 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பெருங்களத்தூர் அருகே உள்ள ஆலப்பாக்கம், காந்தி சாலையை சேர்ந்த ராஜீவ்காந்தி (31), அதே பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகின்றார். நேற்று முன்தினம் இரவு நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்த மணி என்பவர், 2 பேருடன் ஆட்டோவில் பெட்ரோல் நிரப்ப வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த இளவரசன் (23) என்பவர், பெட்ரோல் போடாமல் செல்போனில் படம் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணி மற்றும் அவரது நண்பர்கள் இளவரசனை சரமாரியாக தாக்கி உள்ளனர்.