ஆத்தூர், ஜூன் 27:ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில், கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழையில்லாததால் கடும் வறட்சியின் பிடியில் சிக்கி மக்கள் தவித்து வருகின்றனர். இதனால் ஆத்தூர் பகுதியில் வியாபாரம் முற்றிலும் முடங்கி போய் உள்ளது. இதனையடுத்து நேற்று, ஆத்தூர் நகரப்பகுதியில் உள்ள இஸ்லாமிய மக்கள், ஆத்தூர் புதுப்பேட்டை பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில், மழை பெய்ய வேண்டி சிறப்பு தொழுகை நடத்தினர். இந்த தொழுகையில், ஆத்தூர் எம்எல்ஏ சின்னதம்பி, நகர அதிமுக செயலாளர் மோகன், அதிமுக சிறுபான்மை பிரிவு நிர்வாகி மகபூப்பாஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.