திருவில்லிபுத்தூர், ஜூன் 25: மழை பெய்ய வேண்டி, திருவில்லிபுத்தூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பாறை சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனம் செய்து வழிபாடு நடத்தினர். திருவில்லிபுத்தூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலையில், செண்பகத்தோப்பு வனப்பகுதிக்கு நுழையும் வழியில், ஒரு பாறையில் சக்கரத்தாழ்வார் சுவாமி அருள்பாலித்து வருகிறார். செண்பகத்தோப்பு மற்றும் அழகர்கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள்,
இந்த சக்கரத்தாழ்வாரை வணங்கி, வனப்பகுதிக்குச் செல்வர். மேற்கு தொடர்ச்சிமலை செண்பகத்தோப்பு பகுதியில் உருவாகும் காற்று, மழை ஆகியவை, இந்த பாறை சக்கரத்தாழ்வாரை வணங்கி அனுமதி பெற்றுத்தான் திருவில்லிபுத்தூரில் மழையாக பொழியும் என்பது ஐதீகம்.