பெரம்பூர்: பாரிமுனை மண்ணடி ஜோன்ஸ் தெருவில், கார் உதிரிபாகம் மற்றும் கார் பெயின்ட் தயாரிக்கும் கம்பெனி உள்ளது. 2 மாடி கட்டிடத்தில் செயல்படும் இந்த கம்பெனியில் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கம்பெனியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைபார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.