சென்னை: காஞ்சிபுரம் அருகே கீழம்பி ஏரிப்பகுதி மற்றும் காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் வனப்பகுதிகளில் ஏராளமான புள்ளிமான், வெளிமான், மயில், சிறுத்தை, காட்டுப்பன்றி, காட்டுப்பூனை, முயல் உள்பட பல்வேறு விலங்குகள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்புவரை, காடுகளை விட்டு, வன உயிரினங்கள் வெளியில் வருவது அரிதாக இருந்தது. தற்போது, தண்ணீர் மற்றும் சரியான உணவு கிடைக்காததால் அவை, காடுகளில் இருந்து வெளியேறி, அருகில் உள்ள கிராம குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு படையெடுக்கின்றன. இதுபோல் குடியிருப்பு, விவசாய நிலங்களுக்கு வரும் மான்களை, நாய்கள், விரட்டி விரட்டி கடிக்கின்றன. சாலையை கடக்கும்போது, வாகனங்களில் சிக்கி, அவை இறக்கின்றன.