தேன்கனிக்கோட்டை, ஜூன் 21: தேன்கனிக்கோட்டை அருகே, 9 நாட்டு துப்பாக்கிகளை போலீசார் கண்டெடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை போலீஸ் எஸ்ஐ முருகேசன் மற்றும் போலீசார், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மல்லிகார்ஜூனா துர்கம் மலைப்பகுதி ஏணிபண்டா ஏரி அருகே, 3 நாட்டு துப்பாக்கிகள் கிடந்தன. அதை எடுத்துசென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், மாலையில் மீண்டும் அதே பகுதியில் ரோந்து சென்ற போது, மேலும் 6 நாட்டு துப்பாக்கிகள் கிடந்தன. இதையும் எடுத்துக்கொண்ட போலீசார், அருகில் உள்ள கிராமங்களில் விசாரணை நடத்தினர்.