கிருஷ்ணகிரி, ஜூன் 21: கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுப்பாராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வருகிற 26ம் தேதி காலை 11 மணிக்கு கோட்ட அளவிலான தபால்துறை சார்ந்த குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது. அஞ்சல் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், தங்களது புகார்களை அனுப்பலாம். அனுப்பும் புகார்களில் முழு விவரங்களும், அதாவது தபால் அனுப்பிய தேதி, அனுப்புநர் மற்றும் பெறுநர் விலாசம் போன்றவற்றை குறிப்பிட வேண்டும்.