×

ஊத்தங்கரையில் தொழிலாளர் நல வாரியத்தில் 336 உறுப்பினர்கள் சேர்க்கை

கிருஷ்ணகிரி, ஜூன் 21:  ஊத்தங்கரையில் நடந்த முகாமில் தொழிலாளர் நல வாரியத்தில் 336 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். கட்டுமானம், உடலுழைப்பு மற்றும் ஓட்டுநர்கள் உட்பட பல்வேறு அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள பழங்குடியினர் வகுப்பை சார்ந்த தொழிலாளர்களை தமிழ்நாடு கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு செய்யும் சிறப்பு முகாம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று நடந்தது. முகாமில் கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) முருகேசன் பங்கேற்று, தொழிலாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டார்.

அதில் 336 தொழிலாளர்களை, நல வாரியங்களில் புதிய உறுப்பினர்களாக பதிவு செய்து, அவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். மேலும், ஏற்கனவே பதிவு பெற்ற 45  தொழிலாளர்களுக்கு பதிவினை புதுப்பித்து வழங்கப்பட்டது. முகாமில், அலுவலக உதவியாளர் நல்லப்பா, தொழிற்சங்க பிரதிநிதிகள் வெங்கடாஜலம், பாலசுப்பிரமணியம், சண்முகம், அசோக், திருமாசக்தி, வேலாயுதம், நாகராஜன், ரவிச்சந்திரன், சுப்பிரமணி மற்றும் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : labor union ,Ottankarai ,
× RELATED இளையரசனேந்தலில் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு