சுரண்டை அருகே தாழ்வாக செல்லும் மின்வயர்களால் ஆபத்து

சுரண்டை, ஜூன் 19: சுரண்டை அருகே தாழ்வாக செல்லும் மின்வயர்களால் விபத்து அபாயம் உள்ளது.சுரண்டையில் இருந்து இரட்டைக்குளம் செல்லும் சாலையில் கோழிப்பண்ணை அருகில் மின்வயர்கள் தாழ்வாக செல்கிறது. இந்த பகுதியில் மினி பேருந்துகள் மற்றும் பள்ளி வாகனங்கள் செல்கின்றன. மினி பேருந்தில் இருந்து கைக்கு எட்டும் உயரத்தில் இந்த மின்வயர்கள் செல்கிறது. இதனால் காற்று அடித்தாலே மினி பேருந்தில் உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இரவு நேரத்தில் பாரம் ஏற்றி வாகனங்கள் வந்தால் விபத்து ஏற்படும் ஆபத்தும் உள்ளது. தற்போது காற்று அதிகமாக வீசுகிறது. எனவே தாழ்வாக செல்லும் மின்வயர்களை உயரமாக மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: