தென்காசி, ஜூன்18: தென்காசி நகராட்சி 10வது வார்டு தனி வார்டை பொது வார்டாக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி நகராட்சி 10வது வார்டு தனி (எஸ்.சி) வார்டாக இருந்தது. இதனை வார்டு மறுசீரமைப்பில் தற்போது 9வது வார்டாக மாற்றியுள்ளனர். மேலும் தற்போது பெண்கள் பொதுவார்டாக மாற்றி அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அப்பகுதி மக்கள் நாட்டாண்மைகள் மாரிமுத்து சமுத்திரம், ராஜா தலைமையில் சுப்பிரமணியன், சந்திரன், சிம்சன், முனியாண்டி, மணி, ராஜேந்திரன், முத்துக்குமார், கருப்பையா, சந்தனமாரி, சுடலை ஆகியோர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆணையாளரிடம் மனு அளித்தனர்.