நெல்லை, ஜூன் 18: இலவச வீட்டுமனை பட்டா கேட்டு நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அகில பாரத இந்து மகா சபா மாநில அமைப்பு தலைவர் ரத்தினகுமார், தென் மண்டல பசு பாதுகாப்பு பிரிவு தலைவர் கண்ணன் ஆகியோர் தலைமையில் நெல்லை டவுன், பாளை, தென்காசி, சுத்தமல்லி, பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு, ‘‘இலவச வீட்டுமனை பட்டா கேட்டு நாங்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம். ஏழை, எளிய மக்களான எங்களுக்கு இதுநாள் வரை வீட்டுமனை பட்டா கிடைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே விரைந்து எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.