சூளகிரி, ஜூன் 13: சூளகிரி தாலுகா அலுவலகத்தில், 5 நாட்கள் நடந்த ஜமாபந்தி நேற்று நிறைவடைந்தது. இதில் மின்சாரம் தடைபட்டதால், கணினி சேவை பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர். சூளகிரி தாலுகா அலுவலகத்தில், கடந்த 4ம் தேதி முதல் 12ம் தேதி வரை 5 நாட்கள் ஜமாபந்தி நடைபெற்றது. இதில் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, ஓய்வூதியம், ஜாதிச்சான்று, வருமான சான்றுகள் கேட்டு ஏராளமான மக்கள் மனு அளித்தனர். ஜமாபந்திக்கு தாசில்தார் மிருணாளினி தலைமை தாங்கினார்.