பூந்தமல்லி: மாநகர போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற நாளன்றே பண பலன்களை வழங்கும்படி ஓய்வு பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை மாநகர போக்குவரத்து ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் அய்யப்பன்தாங்கல் கிளை பேரவை கூட்டம் நேற்று முன்தினம் கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள், கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், கடந்த ஆண்டுக்கான வரவு-செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. பேரவை நிர்வாகி வீரராகவன் சிறப்புரையாற்றினார்.