தோகைமலை, ஜூன் 13: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கல்லடை ஊராட்சி கீழவெளியூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, பிடிஏ, மற்றும் பள்ளி மேலாண்மை குழு சார்பாக மாணவர்கள் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பேரணிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் இடும்பன் தலைமை வகித்தார். பிடிஏ தலைவர் சுரேஷ், பள்ளி மேலாண்மை குழு தலைவி தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணியானது கீழவெளியூர், இந்திராநகர், பாரதிநகர், காமராஜ் நகர், பொியகளத்துப்பட்டி, மதுராநகர், பிள்ளையார்கோவில்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, திருமலை நகர், எம்ஜிஆர் நகர் உள்பட முக்கிய வீதிகள் வழியாக வீடுவீடாக சென்றனர்.