வேதாரண்யம், ஜூன் 12: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு அருகே தீக்குளித்த பெண் உயிரிழந்தார். வாட்டாக்குடி கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் துரைசாமி மகன் கோசிசன் (38). இவரது மனைவி வெண்மணி செல்வி (32). இவர் கடந்த 1ம் தேதி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற கோசிசனும் தீக்காயமடைந்தார்.