பர்கூரில் பழைய பேப்பர் குடோனில் திடீர் தீ

கிருஷ்ணகிரி, ஜூன் 11: கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னபர்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தீபன்(35). இவர், பர்கூர் பழைய பஸ் நிலையம் அருகில் பாத்திர கடையும், அதற்கு பின்புறம் உள்ள கட்டடித்தை பழைய பேப்பர் மற்றும் அட்டை பெட்டிகள் வைக்கும் குடோனாகவும் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில், நேற்று பகல் 2 மணியளவில் அந்த குடோனில் இருந்து குபு குபுவென புகை வந்துள்ளது. இதனைக்கண்டு திடுக்கிட்ட பார்த்தீபன், பர்கூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இதன்பேரில், நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையில் வீரர்கள் ரமேஷ், சசிகுமார், கிருஷ்ணமூர்த்தி, தங்கவேல் உள்ளிட்டோர் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் குடோனில் இருந்த பேப்பர் பண்டல்கள், அட்டை பெட்டிகள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் ₹50 ஆயிரம் இருக்கும். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் கரும்புகை பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: