மத்தூர் பகுதியில் சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கு தனி கல்லறை தோட்டம்

கிருஷ்ணகிரி, ஜூன் 11:  மத்தூரில் கிறிஸ்தவர்களுக்கு கல்லறை தோட்டம் அமைக்க தனி இடம் ஒதுக்கி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்தூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மைத்துறை தலைவர் பாபு(எ)மகபூப் பாஷா தலைமையில், கிறிஸ்தவர்கள் நேற்று கலெக்டர் பிரபாகரிடம் அளித்த மனுவில், மத்தூரில் 150 கிறிஸ்தவ குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் மொத்தம் 5 தேவாலயங்கள் உள்ளது. நாங்கள் இறந்தால் கிறிஸ்தவ வேதாகமத்தின்படி, அன்னியர் சுடுகாட்டில் அடக்கம் செய்வதில்லை. எனவே, சஎங்களுக்கு அரசு சார்பில் கல்லறை அமைக்க தனி இடம் ஒதுக்கி வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: