தர்மபுரி, ஜூன் 11: தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை தேவரத்தம்பட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஆனந்தன்(35). இவரது மனைவி பிரவீணா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள ஆனந்தனுக்கு, உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த ஆனந்தனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவரை ஒட்டப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்தனர். அப்போது, மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், சிறிது நேரத்தில் ஆனந்தன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.