கரூர், ஜூன் 7: ஒன்வேயில் வாகனங்கள் அத்துமீறலால் நெரிசல் ஏற்படுகிறது.
கரூர் திண்ணப்பா தியேட்டர் தெருவில் இருந்து செங்குந்தபுரம் செல்லும் சாலையில் நெரிசலைக் குறைப்பதற்காக போக்குவரத்து போலீசார் ஒருவழிப்பாதையாக அறிவித்துள்ளனர். இந்த இடத்தில் அறிவிப்பு போர்டும் வைக்கப்பட்டிருக்கிறது. இருந்தும் கார்கள், ஆட்டோக்கள் போன்ற வாகனங்கள் இந்த வழியாக அத்துமீறி செல்கின்றன. இதனால் எதிரே வரும் வாகனங்கள் வரிசைகட்டி நின்று விடுகின்றன. இந்த தெருவில் தனியார் மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் உள்ளன. இவைகளில் பார்க்கிங் வசதி செய்யப்படவில்லை.