கெங்கவல்லி, ஜூன் 4: வீரகனூரில் டாஸ்மாக் கடை திறக்க விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கெங்கவல்லி தாலுகா, வீரகனூர் அருகே தென்கரை பூலாம்பாடி ரோடு பெரியாண்டவர் கோயில் அருகே விவசாய நிலத்தில், டாஸ்மாக் கடை கொண்டுவர அதிகாரிகள் முயன்றனர். இதற்கு கடந்த ஒரு வாரமாக அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அந்தப் பகுதி விவசாயிகள் ஒன்று திரண்டு நேற்று காலை 11 மணி அளவில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.