சங்கரன்கோவிலில் கலைஞர் பிறந்த நாள்

சங்கரன்கோவில், ஜூன் 4:  சங்கரன்கோவிலில் தொமுச சார்பில், மறைந்த திமுக தலைவர் கலைஞரின் 96வது பிறந்த நாள் நடந்தது. அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே நடந்த நிகழ்ச்சிக்கு தொமுச அமைப்பு செயலாளர் மைக்கேல் நெல்சன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் லாலாசங்கரபாண்டியன், தொமுச மத்திய சங்க தலைவர் காந்திமதிநாதன், கிளை தலைவர் சங்கர்ராஜ், செயலாளர் அய்யலுசாமி, பொருளாளர் செல்வகுமார், மாவட்ட வக்கீல் அணி முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திமுக பிரமுகரும், தொழிலதிபருமான அய்யாத்துரை பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திமுக, தொமுச கொடிகளை ஏற்றி வைத்து பேசினார். தொடர்ந்து பொதுமக்களுக்கும் மற்றும் பணிமனை ஊழியர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பொறியாளர் அணி சங்கர், முன்னாள் நகர செயலாளர் ராஜதுரை, தகவல்தொழில்நுட்ப பிரிவு குமார், ராஜ், இளைஞரணி சரவணன், கார்த்தி, ராமலிங்கபுரம் ஊராட்சி செயலாளர் கணேசன், மாணவரணி உதயகுமார், வார்டு நிர்வாகிகள் ஆறுமுகம், தங்கவேல், கலைஞர் அகாடமி வெங்கடேஷ், தொமுச நிர்வாகிகள் முத்துகுமார், சண்முகவேல், பண்டாரக்கண்ணு, கணேசன், காளிமுத்து, தேவநேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 பெரும்பத்தூர் ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் லாலா சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். தொமுச நெல்சன், மாவட்ட பிரதிநிதி மாடசாமிபாண்டியன், ஊராட்சி செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தனர். திமுக கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மாணவரணி உதயகுமார், வேல்சாமி, சுல்தான்கருப்பசாமி, செல்லச்சாமி, குருபாலன், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: