சீர்காழி, மே 29: சீர்காழி எம்எல்ஏ அலுவலகத்தில் வைத்திருந்த சீல் அகற்றப்பட்டு வழக்கம்போல் செயல்பட துவங்கியது. சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் தேர்தல் நடத்தை விதி முறையின்படி பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் விதிமுறை விலக்கிக்கொள்ள பட்டதை தொடர்ந்து பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை சீர்காழி தாசில்தார் சபிதா தேவி திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார். இதைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வழக்கம்போல் செயல்பட தொடங்கியுள்ளது.