×

பெரியகுளத்தில் வெற்றி பட்டாசு வெடித்து திமுகவினர் கொண்டாட்டம்

பெரியகுளம், மே 25:  பெரியகுளம் தொகுதியில்  ஏப்.18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் சரவணக்குமார், அதிமுக சார்பில் மயில்வேல், அமமுக சார்பில்  கதிர்காமு போட்டியிட்டனர். இதில் திமுக சார்பில் போட்டியிட்ட சரவணக்குமார் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் அண்ணாசிலை, காந்திசிலை, தேவர்சிலை, அம்பேத்கர் சிலைக்கு   மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் நகரசெயலாளர் முரளி, ஒன்றிய செயலாளர் பாண்டியன், மீனரவரணி அமைப்பாளர் முருகன், சின்னப்பாண்டி, கந்தன், முருகாயி காமராஜ், பாலமுருகன், முன்னாள் நகரசெயலாளர் ரவி உட்பட ஏராளமான கட்சிதொண்டர்கள் கலந்துக் கொண்டனர். கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர்.   

Tags : party celebration ,
× RELATED ஜி.கே.வாசன் 56வது பிறந்த நாள் நலத்திட்ட உதவி வழங்கி கட்சியினர் கொண்டாட்டம்