பாஜவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஓசூர், மே 25:  நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை பெற்று பாஜ வெற்றி பெற்றது. தொடர்ந்து, 2வது முறையாக நரேந்திரமோடி பிரதமர் ஆகிறார். இதனை கொண்டாடும் வகையில், ஓசூர் காந்தி சிலை அருகில் பாஜ சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கோட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் முனிராஜ், நிர்வாகிகள் வரதராஜன், சுதாநாகராஜன், வேலாயுதம், நாராயணமூர்த்தி, ராமமூர்த்தி, தங்கராஜ், கிரீஷ், விஷ்ணு மற்றும் மகளிரணியினர் கலந்து கொண்டனர்.

Related Stories: