காவேரிப்பட்டணம் அருகே டூவீலரில் மணல் திருடியவர் கைது

கிருஷ்ணகிரி, மே 25: காவேரிப்பட்டணம் அருகே டூவீலரில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். காவேரிப்பட்டணம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் அழகுதுரை தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம்  ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கொட்டாவூர் பஸ் நிறுத்தம் அருகே, டூவீலரில் மணல் மூட்டைகளுடன் வந்த ஒருவரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில், அவர் கொட்டாவூர் பகுதியை சேர்ந்த  முனுசாமி மகன் பெருமாள்(35) என்பதும், தென்பெண்ணை ஆற்றிலிருந்து 5 சாக்கு மூட்டைகளில் மணல் திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், மணல் மூட்டைகளுடன் டூவீலரை பறிமுதல் செய்தனர்.

Related Stories: