ஓசூர், மே 25: ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் குடை மிளகாய் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஓசூர் பகுதி சீரான தட்பவெட்ப நிலையை கொண்டுள்ளதால், காய்கறிகள், கீரைகள், பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், ஆயிரம் ஏக்கரில் குடைமிளகாய் பயிரிடப்பட்டுள்ளது. குடைமிளகாய் நடவு செய்யப்பட்ட 90 நாட்களில் அறுவடை செய்யப்படுகிறது.