×

டூவீலர் மோதி பெண் பலி

கிருஷ்ணகிரி, மே 25:ராயக்கோட்டை-ஓசூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் மனைவி கனகா(44). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 2 நாட்களுக்கு முன், ஓசூர் ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த டூவீலர், அவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.

அவரை மீட்ட அக்கம்,பக்கத்தினர் ராயக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கனகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tuveer ,
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு