பஸ் மோதி தொழிலாளி பலி

திசையன்விளை, மே 24:    திசையன்விளை அருகேயுள்ள பட்டரைகட்டிவிளையைச்  சேர்ந்த துரைராஜ் மகன் வேல்ராஜ் (29). கூலி தொழிலாளியான இவர் நேற்று மதியம்  பட்டகரைகட்டிவிளை விலக்கு பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது நெல்லையில் இருந்து திசையன்விளை நோக்கி அதிவேகமாக வந்த அரசு பஸ், எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வேல்ராஜ் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திசையன்விளை இன்ஸ்பெக்டர் ஜூடி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: