சென்ைன: இந்திய ராணுவத்தில் வீரர், தொழில்நுட்பம், விண்வெளி, ஆயுதப் பொருள் பரிசோதகர், செவிலியர், உதவியாளர், எழுத்தர்,பண்டக சாலை காப்பாளர், பொது சேவை மற்றும் விற்பனையாளர் ஆகியோரை தேர்வு செய்ய கடலூர் மாவட்டம் நெய்வேலி பாரதி ஸ்டேடியத்தில் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு அதாவது கடலூர், வேலூர், திருவண்ணாமலை, சென்னை. திருவள்ளூர், விழுப்புரம். காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி ( யூனியன் பிரதேசம்) ஆகிய இடங்களில் ராணுவத்திற்கு தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்ய நெய்வேலி பாரதி மைதானத்தில் சென்னை தலைமையிட ஆள்சேர்ப்பு அலுவலகத்தால் ஆள் சேர்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.