மேலூர் அருகே சக்திவேல் முருகன் கோயிலில் 30ம் ஆண்டு வைகாசி விழா

மேலூர், மே 19: மேலூர் அருகில் உள்ள ஆட்டுக்குளம் உலகநாதபுரத்தில் அமைந்துள்ள சக்திவேல் முருகன் கோயிலில் 30ம் ஆண்டு வைகாசி விசாக விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். 30ம் ஆண்டான இந்த ஆண்டும் விழா சிறப்பாக நடைபெற்றது. புதுக்கண்மாய் கருங்கல்லில் இருந்து பால்குடம், காவடி, சந்தனகுடம் ஏந்திய பக்தர்கள் கிராமத்தின் பல்வேறு சாலைகளின் வழியாக 2 கி.மீ. தூரம் ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தனர்.பின்னர் அங்கு முருகனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக நேற்று முன்தினம் இரவில் புலவர் சோமநாதன் தலைமையில், நடராஜன் குருக்கள் முன்னிலையில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக கமிட்டி தலைவர் ரெகுநாதன், செயலாளர் பழனியப்பன், பொருளாளர் சோமன், தணிக்கையாளர் சிவஞானம் மற்றும் நகரத்தார்கள் செய்திருந்தனர்.

Related Stories: