வைகாசி தேரோட்டம்

ராஜபாளையம், மே 19: ராஜபாளையம் அருகே, தேவதானத்தில் தவம்பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி, அம்பாள் அன்ன வாகனம், யானை, புஷ்ப வாகனம் என பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதி வழியாக தேர் உலா வந்து மீண்டும் கோயிலை அடைந்தது. டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: