சென்னை: திருமணமாகாத ஏக்கத்தில் சினிமா டான்சர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருகம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் பரத் (35). நடன கலைஞரான இவர், நண்பர்களுடன் வாடகை வீட்டில் தங்கி இருந்தார். மின்சார கனவு உள்ளிட்ட பல திரைப்படங்களில் டான்சராக பணியாற்றி உள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸ் நடன குழுவிலும் பணிபுரிந்து வந்தார். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் குழந்தைகளுக்கும் இவர்தான் நடன பயிற்சி கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இவருக்கு சரியாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இவர் பல ஆண்டுகளாக திருமணம் ெசய்ய பெண் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சரியான வாழ்க்கை துணை அமையவில்லை. இதுபற்றி சக நண்பர்களிடம் கூறி வேதனையடைந்துள்ளார்.