போச்சம்பள்ளி மே 15: போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் கால்நடைகக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், வெளி மாவட்டங்களில் இருந்து வைக்கோல் கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால், கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நெல் சாகுபடி செய்வதன் மூலம் கிடைக்கும் வைக்கோலை, கால்நடைகளுக்கு தீவனமாக வழங்கி வந்தனர். இந்நிலையில், தற்போது நிலவி வரும் வறட்சியால் அறுவடை செய்யப்பட்ட நெல்லில் இருந்து கிடைக்கும் வைக்கோல் கால்நடைகளுக்கு பற்றாக்குறையாக உள்ளது.