தேன்கனிக்கோட்டை, மே 15: பெட்முகிலாளம் மலை கிராமத்தில், பள்ளி இடைநின்ற மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கபட்டது. கெலமங்கலம் ஒன்றியம் பெட்டமுகிலாளம் ஊராட்சிக்குட்பட்ட கோட்டையூர்கொல்லை, சித்திக்நகர், சித்தாபுரம், தட்டகரை ஆகிய மலை கிராமங்களில், பள்ளி இடைநின்ற மாணவர்கள் ஆய்வு மற்றும் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். முகாமில் கல்வியின் நோக்கம், கல்வியால் சமுதாய முன்னேற்றம், மலைவாழ்மக்களுக்கு மத்திய, மாநில அரசு வழங்கும் கல்வி சலுகைகள் குறித்தும் பேசி பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.