நாங்குநேரி, மே 14: நெல்லை மாவட்டம், நாங்குநேரி மற்றும் சுற்று வட்டாரத்தில் கடந்த சில மாதங்களாக வீடுகளில் வளர்க்கப்படும் ஆடுகளை மர்ம கும்பல் மாலையில் நோட்டமிட்டு இரவில் திருடிச்சென்று நள்ளிரவில் கறி விருந்து நடத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக வீடுபுகுந்து திருடும் ஆடுகளை இரவு நேரங்களில் அங்குள்ள காடுகளிலும் விவசாய பம்ப் செட்டுகளிலும் வைத்து சமைத்து கூட்டமாக சேர்ந்து மதுவுடன் பார்ட்டி கொண்டாட்டம் நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து புகார் அளித்தால் சம்பந்தபட்ட காவல் நிலையங்களில் முறையான நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் ஆடு வளர்ப்போர் குற்றம் சாட்டுகின்றனர்.