போச்சம்பள்ளி, மே 10: போச்சம்பள்ளியில், விவசாயி வங்கி கணக்கில் இருந்து ₹61,000 பணம் எடுக்கப்பட்டுள்ளது. போலி ஏடிஎம் கார்டு மூலம் இச்சம்பவம் நடந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த குண்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நடேசன் (60) விவசாயி. இவருக்கு, போச்சம்பள்ளி பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு உள்ளது. கடந்த 5ம் தேதி வங்கியில் அமைந்துள்ள ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க முயன்றபோது, கணக்கில் பணம் இல்லை என மெசேஜ் வந்தது. அதிர்ச்சியடைந்த நடேசன், வங்கி மேலாளரிடம் இதுகுறித்து கேட்டபோது, மும்ைப மற்றும் புனேவில் உள்ள ஏடிஎம் மையத்தில் இருந்து ₹61,000 எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.