நாகர்கோவில், மே 10: குமரி மாவட்ட செய்தி மக்கள் ெதாடர்பு அலுவலக செய்திகுறிப்பு: தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) பயின்று, தேர்ச்சி பெற்று தேசிய தொழிற் சான்றிதழ் (என்டிசி) பெற்று அப்ரண்டீஸ் ஆக்ட் 1961-ன் கீழ் தொழிற்சாலைகள் மூலமாக அப்ரண்டீஸ் பயிற்சி பெறாதவர்களும் மற்றும் அப்ரண்டீஸ் ஆக்ட் 1961-ன் கீழ் அப்ரண்டீஸ் பயிற்சி அமல்படுத்தக்கூடிய தொழிற்சாலைகளில் நேரடி பணியாளர்களாக குறைந்தபட்ச அனுபவம் பெற்றவர்களும், மத்திய அரசு வழங்கும் தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் (என்ஏசி) பெற விரும்பினால் தனித்தேர்வர்களாக மத்திய அரசால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்பழகுநர் தொழிற்தேர்வில் கலந்து கொள்ளலாம்.