தென்காசி, மே 9: தென்மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பண்பொழி திருமலைக்குமாரசாமி கோயில் 544 படிக்கட்டுகளை கொண்டது. இந்த படிகட்டுகளின் வழியாக ஏறிச்சென்றுதான் மலை மீது அமர்ந்துள்ள முருகனை பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். கடந்த 2011ம் ஆண்டு இந்த மலைக்கோயிலுக்கு செல்லுவதற்கான மலைப்பாதையை தமிழக அரசின் அனுமதியோடு அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் அருணாசலம் தனது சொந்த செலவில் அமைத்து கொடுத்தார். மேலும் அவரும், அவரது துணைவியார் பரமேஸ்வரியும் புதிதாக உருவாக்கிய தங்கத்தேர் திருவிழா நாட்களில் வீதியுலா வருகிறது. மேலும் இவர்களது சொந்தசெலவில் 5 நிலை கொண்ட 48.75 அடி உயரத்தில் ராஜகோபுரம் அமைப்பதற்காக துவங்கிய கட்டுமானப் பணி நிறைவடைந்தது. இதையடுத்து வர்ணம் பூசும் பணிகளும் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன.