ஓசூர்,மே 8: ஓசூர் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு காலாவதியான குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது. ஓசூர் ஜனப்பர் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (30). தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். நண்பர்களுடன் ஏற்பட்ட பிரச்னையால் நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அருணை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அருணுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. அதில், ஒரு குளுக்கோஸ் முழுவதும் செலுத்தப்பட்டு, மற்றொரு குளுக்கோஸ் மாற்றப்பட்டது.