மணல் கடத்திய லாரி பறிமுதல்

புளியங்குடி, மே 7:  புளியங்குடி எஸ்ஐ குருசந்த வடிவேல் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் நெற்கட்டும்செவல் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள காட்டாறு பகுதியில் மணலுடன் வந்த லாரியை மடக்கினர். டிரைவர் லாரியை விட்டு விட்டு தப்பியோடி விட்டார். இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய டிரைவர் தங்கசாமி மகன் வெள்ளத்துரையை தேடி வருகின்றனர்.

Related Stories: