நெல்லை ஜி.ஹெச்சில் பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட பெண், குழந்தையுடன் சாவு

பேட்டை, மே 3:   நெல்லை பேட்டை எம்.என்.பி. சன்னதி தெருவைச் சேர்ந்தவர் தக்கரை பீர்முகமது (35). கூலி தொழிலாளியான இவருக்கும், தாழையூத்து அடுத்த நாஞ்சான்குளத்தை சேர்ந்த மெய்யழகன் மகள் சுபைதா பாத்திமாவுக்கும் (30) கடந்த ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நடந்தது. பின்னர் கர்ப்பிணியான சுபைதா பாத்திமாவுக்கு 7 மாதம் ஆன நிலையில் பேறுகால வலி ஏற்பட்டது. இதையடுத்து  நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை இறந்த நிலையிலேயே பிறந்தது. சிறிதுநேரத்தில் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சுபைதா பாத்திமாவும் பரிதாபமாக இறந்தார். நெலலை ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: