பால் உற்பத்தியில் மட்டுமல்லாமல் வெண்மைப்புரட்சியின் மற்றொரு அங்கமான முட்டை உற்பத்தியிலும் நாடு மிகப் பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. முட்டை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் ஒரு நாளைக்கு இரண்டரை கோடி முட்டைகள் கோழி பண்ணைகளிலிருந்து உற்பத்தி ஆகிறது. இந்திய மருத்துவக்கழக ஆலோசனையின்படி தனி நபர் முட்டை உண்ணும் எண்ணிக்கை ஒரு வருடத்திற்கு 180 ஆகும். ஆனால் நம் நாட்டில் தற்போது தனிநபர் முட்டை உண்ணும் எண்ணிக்கை 45. இந்தக் குறைபாடுகளுக்கு காரணம் முட்டை உண்போரின் எண்ணிக்கை குறைவாக இருப்பது தான். அசைவ உணவு வகைகளில் முட்டையை கருதுவது தான் இந்த குறைபாட்டுக்கு காரணம். முட்டை சைவமா, அசைவமா என்பது குறித்து கால்நடை பராமரிப்பு துறையின் முன்னாள் இணை இயக்குனர் ராஜேந்திரன் கூறியதாவது:
சேவல் இல்லாமல் கோழி முட்டை இடுமா என்ற கேள்வியை கேட்டால் பாமரர் முதல் படித்தவர் வரை இடாது என்றே சொல்வார்கள்.