தொடரும் பலாத்கார சம்பவங்கள்

காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரை சேர்ந்தவர் சரவணன். தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி மல்லிகா. கூலி தொழிலாளி. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இவர்களுக்கு 7 வயதில் மகள் இருக்கிறார். அதே பகுதியை சேர்ந்தவர் முருகன் (40). சரவணன், மல்லிகா ஆகியோர் வேலைக்கு சென்றதும், சிறுமி வீட்டில் இருப்பாள். அப்போது முருகன்,  சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமிக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியிடம் பெற்றோர்கள் விசாரித்தபோது, முருகன் பாலியல் தொல்லை கொடுத்ததை கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியை, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து, காஞ்சிபுரம் தாலுகா போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகனை கைது செய்தனர்.

Related Stories: