மேச்சேரி அருகே பேக்கரியில் தகராறு இன்ஜினியரிங் மாணவர் மீது சுடு பாலை ஊற்றிய வாலிபர்

மேச்சேரி, ஏப்.26:  மேச்சேரி அருகே பேக்கரியில் ஏற்பட்ட தகராறில், இன்ஜினியரிங் மாணவர் மீது சுடு பாலை ஊற்றியதால் படுகாயம் அடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேச்சேரி அருகே சிந்தாமணியூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(26).இவர் ஓமலூர் அருகே தனியார் பொறியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம், மாரியம்மன் கோயில் அருகில் இருக்கும் பேக்கரிக்கு டீ குடிக்க சென்றார். கடையில் கூட்டமாக இருந்தால், தனது செல்போனில் வீடியோ பார்த்து கொண்டிருந்தார்.அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜோதிஸ்வரன் மகன் சபரீசன்(28), கடையில் இது போன்ற வீடியோ பார்க்க கூடாது என்றும் இவரை கடைக்குள் அனுமதித்து ஏன் என்றும் கூறி தகராறு செய்துள்ளார்.

அப்போது கடையில் இருந்த கேசியர் மற்றும் டீ மாஸ்டர் கடைக்கு அனைத்து நபர்களும் வருவார்கள் என்று கூறினர். இதில் ஆவேசம் அடைந்த சபரீசன், டீ போட வைத்திருந்த சுடு பாலை எடுத்து, கார்த்திக் மீது ஊற்றினார். இதில், வலியால் கார்த்திக் அலறி துடித்தார். தடுக்க சென்ற நபர்கள் மீது, கடையில் இருந்த பாட்டிலை உடைத்து, கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பியோடினார். அங்கிருந்தவர்கள் கார்த்திக்கை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து மேச்சேரி ேபாலீசார், சபரீசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: